கதை+ கதாபாத்திரங்கள் + காட்சி அமைப்புகள் = குழப்பங்களே: ‘பயமறியா பிரம்மை’ விமர்சனம்
டைட்டிலே வித்தியாசமா இருக்கே படம், புதிய உலகத்தின் வாசல் திறக்குமோ என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க தொடங்கினால்.. கதை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நொந்த போன நூடுல்ஸை வேக வைக்கும் வேலையை செய்யத்தொடங்கிறது நமது மூளை.
அப்படியென்ன கதை?…
‘பயமறியா பிரம்மை’ என்ற புத்தகத்தை சில வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு வாசகர்களும் தங்களை அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரமாக கற்பனை செய்துகொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்தித்துப் பேசுகிறார்.
ஒரு வித குழப்பத்துடனே நடக்கும் இந்தக் கதையில் ‘கே’யின் பின்னணி இசை ஆறுதல் . 70-80 காலகட்டங்களில் நடக்கிற கதை என்பதால் ஒளிப்பதிவாளர் நந்தா மெனக்கெட்டிருக்கிறார். ஏகப்பட்ட முட்டு சந்துகளில் முட்டி நிற்கும் திரைக்கதை வண்டியை ரிவர்ஸ் கியர் போட்டு மெயின் ரோட்டில் நிறுத்தும் பெரும் பொறுப்பில் கவனிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் அகில் பிரகாஷ்.