கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ₹10 கோடி கொடுக்க வேண்டும்: மன்சூர் அலிகான் விண்ணப்பம்!
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ₹10 கோடியும், வீடும் வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
“இரும்பு திறன் கொண்ட கரும்பு கண்மணி, கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, நடிகர் மன்சூர் அலிகானின் மனமுவந்த மழை பொழியும் பாராட்டுக்கள். குவியட்டும் வெற்றிகள்…தமிழக அரசுக்கு தாழ் பணிந்த வேண்டுகோள். குகேஷ் தம்பிக்கு கொடுத்தது போன்று, நம் தமிழ் சிறுமிக்கு ₹10 கோடி பொற்கிழியுடன், சிறந்த வீடும் சேர்ந்து வழங்குமாறு விண்ணப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்!

