விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் படம்
கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.
தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும். எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை,திரைக்கதை,வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்ய, சண்டைக்காட்சிகளை தினேஷ் சுப்புராயன் அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.