[quads id=2]

‘ஆரகன்’ – விமர்சனம்

அழகிய மலைக்காடு அதில் ஒரு வீடு.. என விஷுவல் ட்ரீட்டை  விரும்புபவர்களுக்கும் அமானுஷ்ய தேடிகளுக்கும் விருந்துவைக்கும் படம்  ‘ஆரகன்’.

அதென்ன ஆரகன் என கூகுள் செய்தால் வேடதாரி, கபட நாடகம் போடுபவன், அழித்தல் செயலை செய்பவன் என்று பல பொருட்கள் கொட்டுகிறது. டைட்டில் சரி… கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கா?… இருக்கு.

கதை என்ன?…

நாயகன் மைக்கேல் தங்கதுரையும் ஆதரவற்ற பெண்ணான கவிப்பிரியாவும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு குறுக்கே வில்லனாய் வருகிறது ஒரு சூழ்நிலை. அதாவது மலைக்காட்டுக்குள் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ரீரஞ்சனியை பராமரித்துக்கொள்ளும் வேலைக்காக செல்கிறார் கவிப்ரியா. ரிஸ்கான ஏரியா என்று தெரிந்தும் கைநிறைய பணம் கிடைக்கும் ஆசையில் ரிஸ்க் எடுக்க துணிந்து அந்த வீட்டிற்கு செல்கிறார் கவிப்ரியா.

போன இடத்தில் புதுசு புதுசாக பூதம் கிளம்புகிறது. அதாவது அந்த வீடு, அங்கு நடக்கும் சம்பவங்கள், ஸ்ரீரஞ்சனியின் செயல் எல்லாமே புரியாத புதிராக இருக்கிறது. அந்த சூழல் என்ன? கவிப்ரியா அங்கிருந்து திரும்புகிறாரா இல்லையா என்பதே கதை.

கவிப்ரியா மீதான காதலில் உருகும் காட்சியில் லவ்வர் பாயாக மனம் பறிக்கிறார் மைக்கேல் தங்கதுரை. ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராதவகையில் அவரது இன்னொரு குணாதிசயம் வெளிப்படும் இடத்தில் பரவாயில்லை மைக்கேலுக்கு நடிப்பும் வருகிறதே என்று பாராட்ட தோன்றுகிறது.

நாயகி கவிப்ரியா மேக்கப் அப்பாத இயல்பான அழகில் அழகு நிலவாக ஜொலிக்கிறார். தனிமை, வெறுமை, அமானுஷ்ய காட்சிகளை பார்த்து முகத்தில் காட்டும் அச்சம் என கவனம் ஈர்க்கிறார். வெல்டன் கவிப்ரியா. ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

படத்தின் ஆகச்சிறந்த பலம் சூர்யா வைத்தியின் ஒளிப்பதிவு. வனத்தின் அழகை வார்த்தெடுக்கும் அதே நேரத்தில் மர்மதேசமாக அதனை காட்சிப்படுத்தி ஒளிப்பதிவை கிலிப்பதிவாக செய்து பயமுறுத்தியுள்ளார். இசையமைப்பாளர்கள்  விவேக் – ஜெஷ்வந்த் இருவரும் பின்னணியில் படம் பார்ப்பவர்களை பதறவைக்கின்றனர்.

இயக்கம் அருண் கே.ஆர். வித்தியாசமான கதைக்களத்தில் புதிய அனுபத்தை தருகிறார். ஆனால் சில இடங்களில் குழப்பத்தில் தடுமாறும் திரைக்கதையை தெளிவாக செதுக்க தவறி இருக்கிறார். சிறுசிறு தடுமாற்றங்களை தவிர்த்திருந்தால் ‘ஆரகனை’ அம்புட்டு ரசித்திருக்கலாம்.

– தஞ்சை அமலன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திரை விமர்சனம்

‘தில்ராஜா’  திறமைக்காரனா? – விமர்சனம்

ஒரே நேரத்தில் பெரிய ஸ்டார் படங்கள் வந்தாலும் ஜெயிக்கிற படம்தான் இங்க பெரிய படம் என்ற தில்லோடு வெளிவந்திருக்கும் படம். படம் ரிலீஸ் செய்வதில் இருந்த தில் படத்தின் தெம்பில் இருக்கிறதா?… பார்க்கலாம்… கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வரும்போது எக்குத்தப்பான பிரச்சனை ஏற்படுகிறது. இதில் அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் எமலோகம் செல்ல, விஜய்சத்யாவுக்கு […]

Read More
திரை விமர்சனம்

எத்தனால் குடித்த எலியின் கதை : ‘ஹிட்லர்’ – விமர்சனம்

நிஜவாழ்வில் தொடர் சோதனைகள் இருந்தாலும் இரும்பின் உறுதியுடன் நம்பிக்கையை பற்றிக்கொண்டு பயணிப்பவர் விஜய் ஆண்டனி. அப்படிப்பட்டவர் சினிமா பயணத்தில் தங்குதடையின்றி செல்கிறாரா ? என்ற கேள்விக்கு ‘ஹிட்லர்’ படமும் தன் பங்குக்கு பதில் சொல்லி இருக்கிறது. ஆளும் கட்சியின் ஊழல் பெருச்சாளியான அமைச்சர் சரண்ராஜுக்கு அடுத்த முதல்வராகும் ஆசை வருகிறது. அடுக்கடுக்கான ஊழல் புகார்களை வைத்திருப்பவர் முதல்வர் ஆவது சாத்தியமா? மக்கள் மறதி; ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வாக்காளர்கள் இருக்கும்வரை அது சாத்தியம்தானே… ஆக மக்களுக்கு லஞ்சம் […]

Read More
திரை விமர்சனம்

ஒரு எட்டு ஊருக்கு போய் பார்க்கத்தூண்டுகிறது :  ‘மெய்யழகன்’  – விமர்சனம்

தொலைந்துகொண்டிருக்கும் அறுந்துகொண்டிருக்கும் உறவுகளின் உன்னதம், மனிதம், பண்பாடு இவற்றை கடுகளவுக்காவது மீட்டுத்தரும் பாசாங்கற்ற சிறுமுயற்சி  ‘மெய்யழகன்’. ‘96’ இயக்குனர் பிரேம்குமாரின் அச்சிறு முயற்சிக்கு தங்கள் பங்குக்கு தோள்கொடுக்க முன்வந்த கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினரை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் செய்யத்தோன்றுகிறது. அப்படியென்ன நிகழ்த்துகிறது இந்தப்படம்?… சொல்லலாம்! அதற்குமுன்.. சமீபகாலமாக ரசிகர்களை பழக்கிவைத்த வன்முறை பார்முலா; குத்துப்பாட்டு; நிஜத்துடன் ஒட்டாத சண்டைக்காட்சி என வழக்கமான சினிமாவை எதிர்பார்த்து போகிறவர்கள் ’மெய்யழகனில்’ அதனை எதிர்பார்க்கவேண்டாம். ‘1996’ல் தொடங்குகிறது கதை. […]

Read More
[quads id=1]