திரை விமர்சனம்

‘பெத்தி’ திரை விமர்சனம்!

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் அடையாளத்தைப் பெற்றுத்தரத் துடிக்கிற இளைஞனின் கனவு என்னவானது என்பதுதான் பெத்தி படத்தின் கதை.

விஜயநகரத்துக்கு அருகிலிருக்கிற ஒரு மலைத்தொடரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கிற கிராமம் ஒன்றிருக்கிறது. மலையிலிருந்து வந்து தங்கி கூலி வேலை செய்கின்றனர் அந்த கிராம மக்கள். ஆனால், அதற்கேற்ற கூலி அந்த மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் அரசியல் அடையாளங்களற்று இந்த அரசின் எந்த ஆவணங்களிலும் இடம்பெறாமல் இருப்பதுதான். வாக்குரிமையற்ற அந்த மக்களுக்குக் கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெறவில்லை. அந்த கிராமத்துக்கு மட்டுமன்றி விஜயநகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறான் அந்த கிராமத்தின் இளைஞன் கிரிக்கெட் வீரன் பெத்தி (ராம் சரண்).

கூலி வேலை செய்கிற பெத்தி, தன்னை ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிற அணிக்காகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அவன் எந்த அணிக்காக விளையாடுகிறானோ அந்த அணியைத் தனது பேட்டிங் திறமையால் வெற்றி பெறச் செய்கிற அசகாய சூரன். அவனது விளையாட்டுத் திறமையைப் பார்த்து அவனது பாரம்பரிய மல்யுத்தப் போட்டிக்குப் பயிற்றுவிக்க அழைக்கிறார் அந்தப் பகுதியின் முன்னாள் மல்யுத்த வீரரும் பயிற்சியாளருமான கவுர் நாயுடு (சிவராஜ்குமார்). இதற்கிடையே பெத்திக்கு அச்சியம்மாவை (ஜான்வி கபூர்) கண்டதும் காதல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE