[quads id=2]

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் மயக்கம்

தமிழ்நாட்டில் வீட்டுவரி, சொத்துவரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டுள்ளதாக திமுக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழ்நாட்டில், அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுக-வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறைக்க, திசை திருப்ப திட்டமிட்டு திமுக முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தொற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஸ்டாலின் மனதில் ஈவு, இரக்கமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா. தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒரு வரி குறிப்பிட்டிருந்தால், உங்கள் நிலைமையே தலைகீழாக மாறி இருக்கும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு ஒரு பேச்சு, அதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதுதான் திராவிட மாடல்” என்றார்.

அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது வெயிலால் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அமர வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது : உயர்நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.க-வில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வெளியானதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக ஓ.பி.எஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “தர்மத்தை நம்பினேன், […]

Read More
அரசியல்

பத்து லட்சத்தை என்ன செய்யப்போகிறார் நல்லக்கண்ணு

“அரசியலில் நுழைந்தால் பதவி வாங்கலாம், பணம் சம்பாதிக்கலாம், அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்றுதான் பலரும் நினைத்து அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ஒருவன் எந்தக் கொள்கைக்காக வாதாடிப் போராடுகிறானோ அதற்கு வெற்றி கிடைக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு எத்தனை கோடிப் பணமும் ஈடாகாது. உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” இப்படிச் சொன்னவர் எளிமையின் சிகரமான தோழர் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு […]

Read More
அரசியல்

தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி சிறப்புக் கொடி

தமிழ்நாடு காவல்துறையை கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் விழா, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கொடியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழங்கப்பட அணிவகுப்பு மரியாதையைத் துணை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கொடுத்த `ஜனாதிபதியின் சிறப்புக் கொடி’யை, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, முதல்வர் அந்த கொடியை டி.ஜி.பி.சைலேந்திர […]

Read More
[quads id=1]