[quads id=2]

எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது : உயர்நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.க-வில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வெளியானதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஓ.பி.எஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “தர்மத்தை நம்பினேன், நீதிமன்றங்களை நம்பினேன், கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன். உண்மையும் தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பி… தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்கள் ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆசைகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்துக்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்பித்திருக்கிறது.

கழக நிறுவன புரட்சித் தலைவர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக அ.தி.மு.க வெற்றி நடைபோடும். அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மா என்னும் உணர்வுகொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

பத்து லட்சத்தை என்ன செய்யப்போகிறார் நல்லக்கண்ணு

“அரசியலில் நுழைந்தால் பதவி வாங்கலாம், பணம் சம்பாதிக்கலாம், அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்றுதான் பலரும் நினைத்து அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ஒருவன் எந்தக் கொள்கைக்காக வாதாடிப் போராடுகிறானோ அதற்கு வெற்றி கிடைக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு எத்தனை கோடிப் பணமும் ஈடாகாது. உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” இப்படிச் சொன்னவர் எளிமையின் சிகரமான தோழர் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு […]

Read More
அரசியல்

தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி சிறப்புக் கொடி

தமிழ்நாடு காவல்துறையை கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் விழா, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கொடியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழங்கப்பட அணிவகுப்பு மரியாதையைத் துணை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கொடுத்த `ஜனாதிபதியின் சிறப்புக் கொடி’யை, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, முதல்வர் அந்த கொடியை டி.ஜி.பி.சைலேந்திர […]

Read More
அரசியல்

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் மயக்கம்

தமிழ்நாட்டில் வீட்டுவரி, சொத்துவரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டுள்ளதாக திமுக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் […]

Read More
[quads id=1]