திரை விமர்சனம்
திரை விமர்சனம்
‘ஆரகன்’ – விமர்சனம்
அழகிய மலைக்காடு அதில் ஒரு வீடு.. என விஷுவல் ட்ரீட்டை விரும்புபவர்களுக்கும் அமானுஷ்ய தேடிகளுக்கும் விருந்துவைக்கும் படம் ‘ஆரகன்’. அதென்ன ஆரகன் என கூகுள் செய்தால் வேடதாரி, கபட நாடகம் போடுபவன், அழித்தல் செயலை செய்பவன் என்று பல பொருட்கள் கொட்டுகிறது. டைட்டில் சரி… கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கா?… இருக்கு. கதை என்ன?… நாயகன் மைக்கேல் தங்கதுரையும் ஆதரவற்ற பெண்ணான கவிப்பிரியாவும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு குறுக்கே வில்லனாய் வருகிறது ஒரு சூழ்நிலை. அதாவது […]
Read More‘தில்ராஜா’ திறமைக்காரனா? – விமர்சனம்
ஒரே நேரத்தில் பெரிய ஸ்டார் படங்கள் வந்தாலும் ஜெயிக்கிற படம்தான் இங்க பெரிய படம் என்ற தில்லோடு வெளிவந்திருக்கும் படம். படம் ரிலீஸ் செய்வதில் இருந்த தில் படத்தின் தெம்பில் இருக்கிறதா?… பார்க்கலாம்… கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வரும்போது எக்குத்தப்பான பிரச்சனை ஏற்படுகிறது. இதில் அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் எமலோகம் செல்ல, விஜய்சத்யாவுக்கு […]
Read Moreஎத்தனால் குடித்த எலியின் கதை : ‘ஹிட்லர்’ – விமர்சனம்
நிஜவாழ்வில் தொடர் சோதனைகள் இருந்தாலும் இரும்பின் உறுதியுடன் நம்பிக்கையை பற்றிக்கொண்டு பயணிப்பவர் விஜய் ஆண்டனி. அப்படிப்பட்டவர் சினிமா பயணத்தில் தங்குதடையின்றி செல்கிறாரா ? என்ற கேள்விக்கு ‘ஹிட்லர்’ படமும் தன் பங்குக்கு பதில் சொல்லி இருக்கிறது. ஆளும் கட்சியின் ஊழல் பெருச்சாளியான அமைச்சர் சரண்ராஜுக்கு அடுத்த முதல்வராகும் ஆசை வருகிறது. அடுக்கடுக்கான ஊழல் புகார்களை வைத்திருப்பவர் முதல்வர் ஆவது சாத்தியமா? மக்கள் மறதி; ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வாக்காளர்கள் இருக்கும்வரை அது சாத்தியம்தானே… ஆக மக்களுக்கு லஞ்சம் […]
Read Moreஒரு எட்டு ஊருக்கு போய் பார்க்கத்தூண்டுகிறது : ‘மெய்யழகன்’ – விமர்சனம்
தொலைந்துகொண்டிருக்கும் அறுந்துகொண்டிருக்கும் உறவுகளின் உன்னதம், மனிதம், பண்பாடு இவற்றை கடுகளவுக்காவது மீட்டுத்தரும் பாசாங்கற்ற சிறுமுயற்சி ‘மெய்யழகன்’. ‘96’ இயக்குனர் பிரேம்குமாரின் அச்சிறு முயற்சிக்கு தங்கள் பங்குக்கு தோள்கொடுக்க முன்வந்த கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினரை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் செய்யத்தோன்றுகிறது. அப்படியென்ன நிகழ்த்துகிறது இந்தப்படம்?… சொல்லலாம்! அதற்குமுன்.. சமீபகாலமாக ரசிகர்களை பழக்கிவைத்த வன்முறை பார்முலா; குத்துப்பாட்டு; நிஜத்துடன் ஒட்டாத சண்டைக்காட்சி என வழக்கமான சினிமாவை எதிர்பார்த்து போகிறவர்கள் ’மெய்யழகனில்’ அதனை எதிர்பார்க்கவேண்டாம். ‘1996’ல் தொடங்குகிறது கதை. […]
Read More‘லப்பர் பந்து’ – திரை விமர்சனம்
இரு கிரிக்கெட் வீரர்களின் ஈகோ யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் காதல்; குடும்பத்தில் உதித்து உதிரும் ஊடல் கூடல்; ஆங்காங்கே சாதியவெறிக்கு சைலண்டாக கொடுக்கும் சாட்டையடி என எல்லாம் கலந்த ‘லப்பர் பந்தில்’ சிக்ஸர்களாக விளாசி தள்ளி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. ஜெர்சி கடை நடத்தும் ஹரிஸ் கல்யாணுக்கும் ஓவியர் அட்டக்கத்தி தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் காதல். கிரிக்கெட்டில் மைதானத்தில் தினேஷ் களமிறங்கினால் எதிராளிகளின் பந்து துவம்சம்தான். அதேபோல் யார்க்கரில் புலியான ஹரிஸ் கல்யாண் பந்து […]
Read More‘நந்தன்’ – திரை விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடி. இந்த ஊராட்சியில் ஆண்டாண்டு காலமாக அன்னப்போஸ்டில் தேர்வாகி ஊராட்சி தலைவர் நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது பாலாஜி சக்திவேலின் குடும்பம். இதற்கு வருகிறது ஒரு ஆப்பு. வணங்கான்குடியை ரிசர்வ் ஊராட்சியாக அறிவிக்கப்படுகிறது. அதனால் என்ன? தன்னிடம் அடிமையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த வெள்ளேந்தி சசிகுமாரை தேர்தலில் நிற்கவைத்த சசிகுமாரை ஊராட்சி தலைவராக ஜெயிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல். பேருக்குதான் சசிகுமார் தலைவரே தவிர ஊருக்கும் பவருக்கும் பாலாஜிதான். இந்நிலையில் பாலாஜியின் நயவஞ்சகத்தில் சிக்கி […]
Read More‘கோட்’ – விமர்சனம்
ரொம்ப நாளைக்குப் பிறகு நடிப்பு, நடனம், ஃபைட், செண்டிமெண்ட், காமெடி என எல்லா ஏரியாவிலும் கலந்துக் கட்டி விஜய் கலக்கி இருக்கும் படம். ஏற்கனவே வந்த படங்களிலிருந்து சுட்ட கதைதான். தீவிரவாதத்தை கண்ட்ரோல் செய்யும் (SATS) சிறப்பு அதிகாரியான விஜய் ஒரு சூழலில் செல்ல மகனை பறிகொடுக்கிறார். விபத்தில் இறந்துவிட்டதாக நினைக்கும் மகன் பல வருங்களுக்குப் பிறகு உயிருடன் கண்முன் நிற்கிறார். அதுவும் எதிரியாக. ஒரு கட்டத்தில் மகன் விஜய்யே அப்பா கண்களில் விரலை விட்டு ஆட்டும் […]
Read More‘கொட்டுக்காளி’.. இந்திய சினிமாவின் புது ரத்தம்!
ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு படம் எடுக்கவேண்டி இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதுதான் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாகவே இருந்துவரும் விதி. அதை உடைத்திருக்கும் படம் இது. அதேபோல் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய சினிமா ‘கொட்டுக்காளி’. சூரியின் முறை பெண்ணான அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைக்கும் குடும்பம் அவரை ஒரு சாமியாரிடம் அழைத்துச்செல்ல ஒரு ஆட்டோ மற்றும் டூ வீலர்களில் புறப்படுகிறார்கள். போகிற வழியில் சந்திக்கும் பிரச்சனைகள், ஆத்திரம், மூத்திரம் என […]
Read More‘வாழை’ : வைரம் பாய்ந்த வாழ்க்கை வலி
வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் தனக்கென்ற இருக்கையை தக்கவைத்திருக்கும் மாரிசெல்வராஜின் வலி நிறைந்த, வாழைக்காய் சுமந்த இளமை நாள்களின் துயர நொடிகளை கண்முன் நிறுத்தும் வாழ்வியலே இந்த ‘வாழை’ படம். திருநெல்வேலியில் உள்ள புளியங்குளம் கிராமம். சிவனனைந்தன், சேகர் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள். பட்டாம் பூச்சி பருவத்தில் பசிக்காக தவித்தாலும் அவர்களது துன்பங்களின் மருந்தாக இருக்கிறது பள்ளிக்கூடமும் டீச்சர் பூங்கொடியும். ஒருவன் ரஜினி ரசிகன் இன்னொருவன் கமல் ரசிகன். பள்ளிக்கூட விடுமுறை வந்துவிட்டால் மற்றவர்கள் […]
Read Moreஎஸ்.ஜே.சூர்யா சொன்ன ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் கதை
டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் […]
Read More