[quads id=2]

‘காரி’ திரை விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் என்ற நல்ல நடிகனை வெற்றியின் முதுகில் சவாரி செய்ய வைத்திருக்கும் படம் ’காரி’.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனெந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக ஒரு கோயில். அந்தக் கோயில் நிர்வாகம் யாருக்கு என்பதில் இரண்டு ஊருக்கும் போட்டா போட்டி. வரவிருக்கும் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தி, ஒரு கிராமத்து சார்பில் காளைகளையும், இன்னொரு கிராமத்து சார்பில் காளையர்களையும் களத்தில் இறக்கி யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஊருக்குதான் கோயில் நிர்வாகம் என பேசி முடிவெடுக்கப்படுகிறது. போட்டி நாள் நெருங்கி வரும் வேளையில் மாட்டை அடக்க காரியூருக்கு ஒரு வீரனும், சிவனெந்தலுக்கு ஒரு காளையும் தேவைப்படுகிறது. சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமாரை மாடுபிடி வீரராக அழைத்து வருகிறது ஒரு சூழல். அதேபோல் எந்த போட்டியிலும் பிடிபடாத கதாநாயகி பார்வதி அருணின் காரி காளை சிவனெந்தல் கிராமத்திற்கு கிடைக்கிறது. சசிகுமாருக்கு காரி காளை அடங்குகிறதா காரியூர் கெளரவத்தை நாயகன் காப்பாற்றுகிறாரா இல்லை என்பது க்ளைமாக்ஸ்.

கதை சுருக்கத்தின்படி ஜல்லிக்கட்டு அதனைச் சுற்றிய கலாச்சாரம், காதல் என்று திரைக்கதை பண்ணியிருந்தாலே படம் கம்பீரமாக நின்றிருக்கும். ஆனால் கார்பரேட் அரசியல், கிராமத்தை மலடாக்க நினைக்கும் சதி என வெவ்வேறு திசையில் கதை கிளை பிரிவதால் ஆங்காங்கே படத்தில் தொய்வு ஏற்படுகிறது.

எனினும் தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் இவற்றை மீட்டெடுப்பதற்கான குரல் ஓங்கி ஒலிப்பதால் ‘காரி’யை உச்சிமுகரலாம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சசிகுமார் நிறைவு. இறந்துபோன தந்தையை நினைத்து உருகுவது. காதலி பார்வதியிடம் மருகுவது,  அவரது இழப்பை உயிரை கொடுத்து திருப்பி தருவது என சசிகுமார், நடிப்பின் எல்லா ரசங்களிலும் ஜொலிக்கிறார்.

நாயகி பார்வதி அருண் தமிழுக்கு கிடைத்த நல்வரவு. தம்பிபோல் நினைத்த தனது காரி காளை, அடிமாட்டுக்கு விற்கப்பட்ட செய்தி அறிந்து மண்ணில் புரண்டழுகும் அந்த ஒரு காட்சி அவரை நடிப்பு ராட்சசியாய் அடையாளம் காணச்செய்கிறது. வெல்டன் பார்வதி.

ஜல்லிக்கட்டு காளைகளின் உயிரணுக்களை வெளிநாட்டுக்கு விற்கும் கார்பரேட் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி வருகிறார். அவரது உடல்மொழி செயற்கைத்தனமாக இருக்கிறது. அதிலும் முரட்டுக்காளைகளை முழுதாக வறுத்தெடுத்து சாப்பிட நினைக்கும் சைகோத்தனம் ஜீரணிக்கமுடியாத காட்சிகள்.

காரியூர் தலைவராக வரும் நாகி நீடு, நாயகியின் குடிகார தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல், சசிகுமாரின் தந்தையாக ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் காட்சியை தவிர்த்திருக்கலாம்.

டி.இமான் இசையில் “தகப்பன் தோளில் சாமி பார்த்தோம்..” என்ற மறைந்த கவிஞர் லலிதானந்தின் பாடல் கண்களை ஈரமாக்குகிறது. “சாஞ்சிக்கவா..” பாடலும் இனிமை.

”நீ உன் நண்பனுக்கு உதவி செய்யல.. உன்னையே நம்பியிருந்த ஒரு உசுருக்கு துரோகம் பண்ணிட்ட” என்பதுபோன்ற வசனங்களில் இயக்குனரின் ஆளுமை தெரிகிறது. 18 வகையான காளைகள் இருக்கிறது என்ற செய்தியை சொல்லும் இயக்குனர் ஹேமந்த், ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத விஷயங்களையும் டீட்டெயில் செய்திருந்தால் ‘காரி’ இன்னுமும் அழுத்தம் பெற்றிருக்கும்.

சில குறைகள் இருந்தாலும் சமூக நோக்கம் கொண்ட கதையை கையில் எடுத்ததற்காகவே ஹேமந்தையும் இதனை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமாரையும் வெகுவாக பாராட்டலாம்.

‘காரி’ வெற்றி திமிலை அணைக்கும்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விமர்சனம்

‘ஆலகாலம்’. விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஆலகாலம்’.   இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.   இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.   விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு […]

Read More
விமர்சனம்

‘கும்பாரி’ விமர்சனம்

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள். ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை .பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை […]

Read More
விமர்சனம்

‘வான் மூன்று’ திரை விமர்சனம்

இப்போதெல்லாம் திரையரங்கில் வெளியாகும் படங்களைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில்  ‘ஆஹா’ தளத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் படம்தான் ‘வான் மூன்று’ எப்படி இருக்கிறது படம்? ஒரு மருத்துவமனை அதில் சந்திக்கும் சில மனிதர்கள் அவர்களை சார்ந்த பிரச்சனைகளே படத்தின் ஒன்லைன். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால்.. தற்கொலைக்கு முயற்சி செய்த அம்முஅபிராமி, காதல் தோல்வியால் உயிரை இழக்க துணிந்த ஒரு கதாபாத்திரம், மனைவியின் சிகிச்சைக்கு போதிய […]

Read More
[quads id=1]