சினிமா செய்திகள்

கார்த்தியின் தெலுங்கு என்ட்ரி! தொடங்கியது #Karthi30

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

#Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்புடன் வருகிறது. தொழில்துறை வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி பெரும் உற்சாகத்தை தருகிறது.

கார்த்தியின் தீவிரமான, அதேசமயம் நேசிக்கத்தக்க திரை இமேஜும், கல்யாண் சங்கரின் உற்சாகமான கதைசொல்லல் பாணியும் இணையும் போது உருவாகும் புதுமையான அனுபவம் ரசிகர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான உலகம், மகிழ்ச்சியூட்டும் கதாபாத்திரங்கள் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

படக்குழு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் உள்பட முக்கிய அப்டேட்களை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட்கள் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும், வரவிருக்கும் பயணம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

வலுவான காம்பினேஷன், வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம், திறமையான இளம் இயக்குநர் மற்றும் மிகவும் பிரபலமான நட்சத்திரம் ஒன்றிணைந்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது உருவாகி வரும் மிக முக்கியமான மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

விரைவில்… இந்தப் படம் தொடர்பான பெரிய அப்டேட்கள் வெளியாக உள்ளன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE